ADDED : மார் 11, 2015 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குழந்தை போல உன்னைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு. அவர் கையில் தாங்கிக் கொள்வார்.
* பிரச்னையைச் சசரிவர புரிந்து கொள்ளாததால், மனிதர்கள் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
* சரியானவழியில் மன உறுதியுடன் செயல்பட்டால், பயப்படத் தேவையிருக்காது.
* மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஏமாற்றலாம். கடவுளால் யாருக்கும் ஏமாற்றம் கிடையாது.
* மனக்கட்டுப்பாடு மனிதனுக்கு அவசியம். பல சந்தர்ப்பங்களில் அதன் உதவியால் தீமையை வெல்ல முடியும்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயற்சி செய்வது மேலானது.
- ஸ்ரீஅன்னை