
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அமைதியில் உண்டாகும் ஆற்றலுக்கு அளவில்லை. எல்லா தீமையையும் அதன் மூலம் போக்கி விட முடியும்.
* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் மனம் சஞ்சலப்படத் தொடங்கி விடும்.
* படிப்பதை அடியோடு புறக்கணிப்பது கூடாது. நல்ல நுால்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது அவசியம்.
* ஆத்திரமோ அவசரமோ வேண்டாம். செய்வதைச் செவ்வனே திருந்தச் செய்து வந்தால் போதும்.
* தெய்வத்தைச் சரணடைவதால் யாரும் குறைந்து போவதில்லை. மாறாக வளரவே செய்கிறார்கள்.
- ஸ்ரீஅன்னை