ADDED : செப் 29, 2013 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* முன்னேறிக் கொண்டே இருங்கள். முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நினைத்தாலும் திருப்பிப் பார்க்காதீர்கள். தவறு நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு நன்மை செய்வது தான் தர்மம். மற்றவர்களுக்குத் தீமை செய்வது பாவம்.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் கொண்ட மனிதனை நசுக்கக் கூடிய ஆற்றல் யாருக்கும் கிடையாது. இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அவனால் சாதிக்க முடியும்.
* கொழுந்து விட்டெரியும் ஆர்வம் நாலாபுறத்திலும் பரவட்டும். பணியாற்றும் போது ஒரு வேலைக்காரனை போல இருங்கள்.
* ஆன்மிகத்தை லட்சியமாகப் போற்றுங்கள். மேலை நாட்டு நாகரிகத்தின் பின்னால் சென்றால் நம் பண்பாட்டின் அடிப்படை ஆட்டம் கண்டு விடும்.
- விவேகானந்தர்