2021 கொண்டாட்ட மனநிலையுடன் நிறைவு - சிம்பு மகிழ்ச்சி
2021ம் ஆண்டு நடிகர் சிம்புவிற்கு திருப்புமுனை தந்த ஆண்டாக அமைந்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புத்தாண்டை முன்னிட்டு சிம்பு வெளியிட்ட அறிக்கை : நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.
இறைவனின் கருணையால் இந்த புதிய வருடத்தை காண உள்ளோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை பெரிய வெற்றி படமாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும், உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக மக்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல
இவ்வாறு தெரிவித்துள்ளார்.