உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா ஹீரோயின் ஆனார் காவ்யா

சினிமா ஹீரோயின் ஆனார் காவ்யா

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் காவ்யா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்தார். இப்போது சினிமா நடிகை ஆகிவிட்டார்.

படத்தில் நடிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானது வேறொரு படத்தில் ஆனால் ரிப்புபரி எனது முதல் திரைப்படமாக அமைந்து விட்டது. சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்தபோதுதான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என்னுடைய கதாபாத்திரம் பிரபலமானதும், பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நினைத்த மாதிரி சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

நான் சீரியலில் நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுட்டதாக இது இருக்கும். கிராமப்புற பின்னணியில் திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. நான் மகேந்திரன் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !