மீண்டும் சுந்தர்.சியுடன் ஜீவா-ஜெய்யின் கலகலப்பு கூட்டணி
ADDED : 1345 days ago
ஆக்சன், அரண்மனை-3 படங்களை தொடர்ந்து மீண்டும் வழக்கமான தனது காமெடி ரூட்டிற்கு திரும்பியுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, பிகில் புகழ் அம்ரிதா மற்றும் மாளவிகா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவக்க விழா நிகழ்வுடன் ஆரம்பித்துள்ளது.. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் ஜீவாவும் ஜெய்யும் இணைந்து நடித்திருந்ததனர். ஆனால் ஸ்ரீகாந்த் தற்போதுதான் முதன்முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார்.