உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனசு வலிக்கிறது - சரண்யா

மனசு வலிக்கிறது - சரண்யா

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா துராடி. விஜய் டிவியின் 'ஆயுத எழுத்து' தொடரில் நடித்த வந்த சரண்யா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் 'வைதேகி காத்திருந்தால்' தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் மனமுடைந்த சரண்யா தனது சமூகவலைதளத்தில், 'இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. உழைப்பை உதாசீனப்படுத்தும் போது மனது வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டும் வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் சில எபிசோடுகள் ஹீரோவாக நடித்து, நடித்த காட்சிகள் முழுதாக கூட வெளிவராத காரணத்தால் முன்னாவும் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

வைதேகி காத்திருந்தால் தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் ஹீரோவாக ஒரு சில எபிசோடுகள் நடித்து வந்த போதிலும், சீரியலை நிறுத்த தயாரிப்புக்குழு மற்றும் டிவி நிறுவனம் முடிவு செய்தது. இந்த தொடர் மொத்தமாக 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !