உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருட்டு புகாரும் தர முடியாது, காப்பி அடிக்கவும் முடியாது : பதிவு செய்யப்பட்டது விக்ரம் கதை

திருட்டு புகாரும் தர முடியாது, காப்பி அடிக்கவும் முடியாது : பதிவு செய்யப்பட்டது விக்ரம் கதை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்திருக்கும் படம் விக்ரம். வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் கதை கசிந்தது. அதன்படி கமல் ஒரு சிறைத்துறை அதிகாரி. அந்த சிறையில் கொடூர குற்றம் செய்த கைதியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. அவரை தப்பிக்க வைக்க அந்த சிறைக்குள் வருகிறார் சர்வதேச எஸ்கேப் ஸ்பெஷலிஸ்ட்டான பகத் பாசில். சிறைக்குள் இந்த மூவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் கதை என்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய ஸ்கிரிப்டை இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவு செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ். அதனால் இந்த படத்தின் கதை எனது கதை என்று யாரும் வழக்கு தொடர முடியாது. படத்தின் கதையையோ, காட்சியையோ யாரும் காப்பி அடிக்கவும் முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !