உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்

மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய், ராதிகா யோகிபாபு, ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி, புகழ், அபிராமி அம்மு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது அருண் விஜய் படத்தை தீவிரமாக விளம்பரம் செய்யும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது ரசிகர்களைச் நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்து வருகிறார் .

இந்நிலையில் அருண் விஜய் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ளார். அப்படியே அங்குள்ள பிரபல பத்துமலை முருகன் கோவிலுக்கு சென்று யானை படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !