காந்தாரா நாயகி பாலிவுட்டில் அறிமுகம்
ADDED : 989 days ago
கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி ஜோடியாக நடித்திருந்தார் சப்தமி கவுடா. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் காந்தாரா படம் தான் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
இந்த நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சப்தமி கவுடா. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கும் 'வாக்சின் வார்' படத்தில் நடிக்கிறார் சப்தமி கவுடா.
இதுகுறித்து அவர் கூறும்போது “புகழ்பெற்ற ஒரு இயக்குனர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. படத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பங்கு இருக்கிறது. என் பங்கை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன்'' என்றார்.