கிராமத்து நாயகனாக களமிறங்கும் ஜெயம் ரவி!
ADDED : 1024 days ago
நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரைக்கு வருகிறது. இப்போது சைரன், இறைவன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க கிராமத்து கதையில் தயாராக உள்ளது. முதன்முறையாக ஜெயம் ரவி படம் முழுக்க வரும் கிராமத்து வேடத்தில் நடிக்க போகிறார்.