உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பிரபுதேவா

மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று ஒதுங்கி தனியாகவே வாழ்ந்து வந்தார். இடையில் நடிகை நயன்தாராவுடன் காதல் என சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பிறகு அந்த விஷயம் அடங்கிய நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியம் அளித்தார் பிரபுதேவா.

இந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. இவர்கள் இருவரும் கோயிலுக்கு வந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பிரபுதேவாவின் தற்போதைய மனைவியான ஹிமானி சிங் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு வலி சிகிச்சைக்காக இவரிடம் சிகிச்சை பெற்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !