உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்.கே.சுரேசுக்கு எதிரான வழக்கு: 2 வார அவகாசம் கேட்ட அரசு

ஆர்.கே.சுரேசுக்கு எதிரான வழக்கு: 2 வார அவகாசம் கேட்ட அரசு

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக மட்டுமே ஆருத்ரா நிறுவன இயக்குனர்களுடன் தனக்கு தொடர்பு இருந்தாவும், இது தொடர்பா சில பண பரிவர்த்தனைகள் நடந்தாகவும். ஆனால் மோசடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். அதோடு போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்த விபரங்களை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்டார் அரசு வழக்கறிஞர். இதனை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !