இவர்கள் மூவரிடமும் கதையே கேட்காமல் நடிப்பேன் : பிரியா பவானி சங்கர்
ADDED : 888 days ago
ருத்ரன், பொம்மை படங்களை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டிமான்டி காலனி-2, ஜீப்ரா, அரண்மனை 4, விஷால் நடிக்கும் படம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் ஏற்கனவே நடித்த மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், பொம்மை படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர் என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் அவர்களிடத்தில் கதையே கேட்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன். அதே போல் வெற்றிமாறன் அழைத்தாலும் கதையே கேட்காமல் நடிப்பேன். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது என்கிறார் பிரியா பவானி சங்கர்.