உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய அளவில் ரூ. 50 கோடியை கடந்த ‛ட்ரீம் கேர்ள் 2 '

இந்திய அளவில் ரூ. 50 கோடியை கடந்த ‛ட்ரீம் கேர்ள் 2 '

ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்த படம் 'ட்ரீம் கேர்ள்' . இதன் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரத்தில் ட்ரீம் கேர்ள் 2ம் பாகம் வெளிவந்தது. இதனை ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குராணா, அனன்யா பாண்டே இணைந்து நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் தயாரித்துள்ளனர். கடந்த சில படங்கள் ஆயுஷ்மான் நடித்து தோல்வி அடைந்து வந்தது. ஆனால், இந்த படத்திற்கு விமர்சகர்களிடம் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் முதல் ஜந்து நாட்களில் இந்திய அளவில் ரூ. 52 கோடி வசூலித்தாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !