உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியலில் பேசியது நிஜமாகி போனதா... : மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் இரங்கல்

சீரியலில் பேசியது நிஜமாகி போனதா... : மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் இரங்கல்

சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

மாரிமுத்துவின் நிஜ பெயர் மறைந்து போகி அவர் நடித்து வந்த சீரியலின் ஆதி குணசேகரன் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. சமூகவலைதளங்களில் ரசிகர்களும் எதிர்நீச்சல் குணசேகரன் என குறிப்பிட்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் பல பேட்டிகளையும் பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று கூறுவார் மாரிமுத்து. அதில் உடம்பு வலியா அல்லது மனசு வலியா என தெரியவில்லை. அப்பப்ப வலி வருது, ஏதோ எச்சரிக்கை பண்ணுவது என டயலாக் பேசி இருப்பார். அந்தக்காட்சியை இப்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து நிஜமாகவே உங்களுக்கு இப்படி நடந்துவிட்டதே... என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !