உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் சிங்கள் அறிவிப்பு

‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் சிங்கள் அறிவிப்பு

‛மீசையை முறுக்கு' பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். இப்படத்தில் 'பக்கோடா' என்கிற முதல் சிங்கள் பாடலை ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ளார். இதை நாளை நவம்பர் 3ம் தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !