உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகும் விண்ணைத்தாண்டி வருவாயா!

கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகும் விண்ணைத்தாண்டி வருவாயா!


கடந்த 2010ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன் கூட்டணியில் வெளிவந்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இதில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் முறையே கார்த்திக், ஜெஸ்ஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்னும் ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரங்கள் பேசப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது.

சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்தனர். இதையடுத்து தற்போது வருகின்ற மார்ச் 15ம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !