குருநாதர் ஷங்கரை மிஞ்சிய சிஷ்யன் அட்லீ
தமிழ் இயக்குனரான அட்லீ ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மூலம் அட்டகாசமான இயக்குனர் என்ற பெயரை பாலிவுட்டிலும் பெற்றுள்ளார். ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அந்தப் படம் வசூல் செய்ததே அதற்குக் காரணம்.
அட்லீயின் அடுத்த படமாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம்தான் தயாராகப் போகிறது என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமும் பான் இந்தியா படமாகவே இருக்க வேண்டும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். இப்படத்திற்காக அட்லீக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இதன்மூலம் தமிழ் இயக்குனர்களில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் என்ற பெருமையைப் பெறுகிறார் அட்லீ. அவரது குருநாதரான ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்க இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படத்திற்காக 50 கோடி சம்பளம்தான் வாங்குகிறாராம். 'ஜவான்' படத்திற்குப் பிறகு குருவை மிஞ்சிய சிஷ்யனாக அட்லீ மாறிவிட்டார் என கோலிவுட்டிலும் சிலர் பொறாமையுடன் பேசிக் கொள்வதாகத் தகவல்.