9 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் ஆஸ்கர் விருது படம்
ADDED : 555 days ago
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது 'தி பாய் அண்ட் தி ஹெரான்' என்ற படத்திற்கு கிடைத்தது. இந்த படத்தை உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கி இருந்தார். இதற்கு முன் 11 படங்களை இயக்கி இருந்த அவர் இந்த படத்தை தனது கடைசி படமாக அறிவித்து வெளியிட்டார். உலக நாடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம், இந்தியாவில் வெளியாகவில்லை. 9 மாத இடைவெளிக்குப் பிறகு இப்படம் இந்தியாவில் வெளியாகிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.