உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி!

கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி!


மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் பாட தொடங்கிய பாலிவுட் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி, அதன் பிறகு அனிருத், யுவன் சங்கர் ராஜா என பலரது இசையில் பின்னணி பாடி வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள ஜொனிதா காந்தி, சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்து கையில் கோப்பையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். கிளாமர் ஹீரோயின்கள் அளவுக்கு ஒரு பாடகி இப்படி டூ பீஸ் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !