உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பாடகி பி.சுசீலா

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய பாடகி பி.சுசீலா

தென்னிந்திய சினிமாவின் ‛இசைக் குயில்' பாடகி பி.சுசீலா. அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிக்கம் செலுத்திய பெண் குரல் இவருடையது. சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி உள்ள இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சினிமா மற்றும் முக்கிய விழாக்களில் பங்கேற்கிறார்.

இந்நிலையில் திருப்பதி சென்ற பி சுசீலா, எழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி மனம் உருக சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர், ‛நாராயண மந்திரம்' என்ற பக்தி பாடலை பாடியபடி மெல்ல நடந்து வந்தார். அவருடன் பலரும் போட்டோ எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !