உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேட்டையன் டப்பிங் பணிகளை தொடங்கிய ரித்திகா சிங்

வேட்டையன் டப்பிங் பணிகளை தொடங்கிய ரித்திகா சிங்

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இன்னும் சில நாட்களில் இப்படத்தின் விடுபட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. பஹத் பாசில், அபிராமி, துஷாரா ஆகியோர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இப்போது ரித்திகா இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !