‛ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஆக்சிஸ் பிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. 2015-ம் ஆண்டில் வெளிவந்த 'உறுமீன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து 'மரகத நாணயம்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'ராட்சசன்', 'ஓ மை கடவுளே', 'பேச்சிலர்', 'கள்வன்' உள்ளிட்ட பல வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களை தயாரித்தார்.
டில்லி பாபு இப்போதும் கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க சில இயக்குனர்களுடன் ஒப்பந்தம் போட்டு வந்தார். இதுதவிர தனது மகவ் தேவ்வை ஹீரோவாக்கி 'வளையம்' என்ற பெயரில் ஒரு படத்தினை தயாரித்து வந்தார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவரது கனவும். ஆனால் அந்த கனவு முழுமை அடையும் முன்பே அவர் மறைந்துவிட்டார்.