உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா

பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'மீண்டும் கோகிலா. ஒரு நடுத்தர குடும்பத்து கணவன், மனைவியை விட்டு பிரிந்து ஒரு நடிகையுடன் சுற்றுவதும், பின்னர் தன்னை உணர்ந்து மனைவியுடன் சேர்வதும்தான் கதை, ரொமாண்டிக் காமெடி வகை படம்.

இந்த படத்தை முதலில் இயக்கியது மகேந்திரன். தீபா நடித்த நடிகை கேரக்டரில் நடித்தது பாலிவுட் நடிகை ரேகா. ஆனால் என்ன காரணத்தாலோ 20 சதவிகித படப்பிடிப்பும், ஒரு பாடலும் எடுத்து முடித்த நிலையில் மகேந்திரன் படத்தை விட்டு விலகினார். அதை தொடர்ந்து ரேகாவும் விலகினார். பின்னர் படத்தை இயக்குமாறு ஜி.என்.ரங்கராஜனை கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர் இயக்கினார். ரேகாவிற்கு பதில் தீபா நடித்தார்.

படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பாடல்களும் ஒரு காரணமாக இருந்தது. சின்னஞ்சிறு வயதில், ராதா ராதா நீ எங்கே, ஹேய் ஓராயிரம், பொன்னான மேனி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவிக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !