மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
254 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
254 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
254 days ago
ராஜா ராணி தொடரில் சேர்ந்து நடித்த ஆல்யா மானசாவும், சஞ்சீவும் இன்று சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வருகின்றனர். வாழ்க்கையின் அடுத்தடுத்த உச்சத்தை தொட்டு வரும் இருவரும் சண்டையிட்டு, ப்ரேக்கப் வரை சென்று, இதனால் ஆல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வரை நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், இன்று ஓருயிர் ஈருடல் என வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போதே காதலிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டு ப்ரேக்கப் வரை சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சஞ்சீவ் நடித்தால் ஆல்யா நடிக்கமாட்டேன் என்று சொல்லுமளவிற்கு இருவருக்கும் இடையே மோதல் பெரிதாகியுள்ளது. இதனால் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு இருவரது பெற்றோரும் வந்து சமாதனம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், பலன் அளிக்கவில்லை. இறுதியில் ஓயாமல் போட்ட சண்டையால் ஆல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுவிட, சஞ்சீவுக்கு பதிலாக வேறொரு நடிகரையும் ஆடிஷன் செய்து நடிக்க வைக்க முயற்சி எடுத்துள்ளனர். அதற்குள் ஆல்யாவே மனமிறங்கிவிட இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
ஆனாலும், ஷூட்டிங்கை தவிர வேறு எதற்காகவும் பேசிக்கொள்வது கிடையாதாம். ஒருகட்டத்தில் முழுமையாக சமாதானம் ஆன ஆல்யா சஞ்சீவுடனான ப்ரேக்கப்பை முறித்து கொண்டு வாழ்க்கை பயணத்தில் மூன்று முடிச்சுகளுடன் இணைந்துவிட்டார். இருவரது காதலுக்கு பின்னால் இவ்வளவு சம்பவங்கள் நடந்ததா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
254 days ago
254 days ago
254 days ago