உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமன்னா, விஜய் வர்மா காதல் பிரிவு : காரணம் என்ன?

தமன்னா, விஜய் வர்மா காதல் பிரிவு : காரணம் என்ன?

நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மா இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஒன்றாக சில இடங்களுக்கும் சுற்றி வந்தார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கான காரணம் என்னவென்று வெளியாகவில்லை.

இதனிடையே, அவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமன்னா இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விஜய் வர்மாவிடம் கேட்டிருந்தாராம். ஆனால், விஜய் வர்மா இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதாகவும் அதை தமன்னா ஏற்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

சினிமா உலகில் பல காதல்கள் உருவாகி அவற்றில் சில காதல்கள் பிரிந்துள்ளன, சில காதல்கள் சேர்ந்துள்ளன. சில காதல்கள் திருமணத்திற்குப் பிறகும், சில காதல்கள் குழந்தை பெற்ற பிறகும் கூட பிரிந்துள்ளன. அந்த விதத்தில் இவர்கள் திருணமத்திற்கு முன்பே பிரிந்ததும் நல்லதுதான் என்றும் பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !