உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா

பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா

நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கும் சென்று வழிபடுபவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, இப்போதும் இந்துவாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். அதேசமயம் அவ்வப்போது தேவாலயங்களுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பாரிஸில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளார் நயன்தாரா. அந்த தேவாலயத்துக்கு முன்பு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !