உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வியாபார நிலையில் முன்னேறிய சூரி

வியாபார நிலையில் முன்னேறிய சூரி


தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அடுத்த கட்டத்துக்குச் சென்றவர் சூரி. 'விடுதலை 2' மற்றும் 'கருடன்' ஆகிய படங்கள் அவருடைய நாயகன் அந்தஸ்தை இன்னும் கூடுதலாக்கியது.

அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வரும் மே 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையையும் சூரியே எழுதியுள்ளார். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி சூரி ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி ஓடிடி, சாட்டிலைட் உரிமையிலிருந்தே கிடைத்துவிட்டதாம். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பிரசாந்த் பாண்டிராஜ் ஜீ குழுமத்துடன் நெருக்கமாக உள்ளதால் அங்கேயே படத்தை விற்றுவிட்டார்களாம். அதன் விலை சுமார் 12 கோடி என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது படங்களின் வியாபாரத்திலும் சூரி முன்னேறியுள்ளார் என்பதை கோலிவுட்டில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !