சுந்தர்.சியிடம் பார்ட்டி கேட்கும் நண்பர்கள்
ADDED : 140 days ago
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சுந்தர்.சிக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிவி்ட்டது. திருமண வாழ்க்கையில் 25 ஆண்டை எட்டியிருக்கிறார். 'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' என வரிசையாக 3 வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2'வை இயக்கி வருகிறார். அவர் மூத்த மகள் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இளைய மகள் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டார். இதனால், அவருடைய நண்பர்கள், நெருக்கமான சினிமாகாரர்கள் 'எப்போ பார்ட்டி வைக்கப்போறீங்க. இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எங்கே வரணும்' என்று நச்சரிக்கிறார்களாம். அவரோ, தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகிறாராம்.