ஹரி ஹர வீர மல்லு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இத்தனை கோடியா?
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பெரிய பட்ஜெட்டில் சரித்திர படமாக தயாராகி உள்ளது. இது பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படம். இப்படம் 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன், அட்வென்ச்சர் படமாக எடுக்கப்பட்டுள்ளத. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இதில் பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில், நோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்கிறார் . இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஜூன் 12ம் தேதியன்று வெளியாகிறது.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு நேர்காணலில், இந்த படத்தின் கிளைமாக்ஸிற்காக மட்டும் ரூ.20 கோடிக்கு கிராபிக்ஸ் காட்சியை உருவாக்கியுள்ளோம். இந்த கிராபிக்ஸ் பணிகளை ஆர்.ஆர்.ஆர், 2.0 படங்களில் பணியாற்றிய நிறுவனம் உருவாக்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.