பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா
ADDED : 241 days ago
மலையாள நடிகையான நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா தாங்கள் காதலித்து வரும்போதே அவருடன் சேர்ந்து பல இந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர், உலக் உடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள், அப்போது விக்னேஷ் சிவனும், மகன்களும் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து முருகனை வழிபட்டுள்ளார்கள். அதேபோல் நயன்தாரா முட்டி போட்டு அமர்ந்து முருகனை வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.