நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி
கடந்த 2014ல் தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா நடிப்பில் ஈகா (தமிழில் நான் ஈ) திரைப்படம் வெளியானது. இறந்து போன கதாநாயகன் ஈ வடிவத்தில் வந்து தன்னைக் கொன்ற வில்லனை பழிவாங்குவது போல வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்ட இந்த கதை மிக பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் ஜெனிலியா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜூனியர் என்கிற படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமவுலி பேசும்போது, ஈகா திரைப்படம் எனது சிறந்த படம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அந்த விழாவில் ராஜமவுலி கூறும்போது, “ஜூனியர் என்டிஆர் நடிப்பில் என்னுடைய சிம்மாதிரி படம் வெளியான பிறகு அதுபோன்ற கமர்சியல் படங்களை இயக்குவதற்கு தான் நான் லாயக்கு என்பது போல ஒரு பேச்சு எழுந்தது. அதனை மாற்றும் விதமாகத்தான் ஈகா படத்தை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார்.