உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை'

சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை'


ஹேஷ்டேக் புரொடக்ஷன் சார்பில் தயாராகி வரும் வரும் படம் 'மெல்லிசை'. கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கிறார். 'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' மற்றும் 'பொம்மை நாயகி' ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த சுபத்ரா ராபர்ட் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களோடு ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். 'வெப்பம் குளிர் மழை' திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். ஷங்கர் ரங்கராஜன் இசை அமைக்கிறார், தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் திரவ் கூறும்போது, ஆழமான உணர்வுகள், நுட்பமான கதை சொல்லல், கவிதைத்துவமான கதை என தலைமுறைகள் கடந்து, அன்பை தேடும் பிரபஞ்சத்தின் கதையாக வெளிவர இருக்கிறது 'மெல்லிசை'. இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !