இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி
தானாகவே அமைகிறதா இல்லை பிரபாஸிற்காக என்றே உருவாக்குகிறார்களா என்று நினைக்க தோன்றும் வகையில் தொடர்ந்து அதிக அளவில் இரண்டு பாகநகலாக உருவாகும் படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அதன்பிறகு சலார், பின்னர் கல்கி ஆகிய படங்கள் அடுத்தடுத்து பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகின. இவற்றின் முதல் பாகங்கள் வெளியாகி உள்ளன இரண்டாம் பாகங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இதனை தொடர்ந்து தற்போது சீதா ராமம் புகழ் டைரக்டர் ஹனு ராகவபுடி பிரபாஸை வைத்து இயக்கும் பவுஸி திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று படத்தின் இயக்குனரே புதிய தகவலை தெரிவித்துள்ளார். பிரபாஸிற்கு இரண்டு விதமான பரிமாணங்கள் என்றும், முதல் பாகத்தில் ஒருவிதமாகவும் அதன்பிறகு வெளியாகும் இரண்டாம் பாகத்தில் ஒருவிதமாகவும் அவரது கதாபாத்திரம் இருக்கும் என்றும் இயக்குனர் ஹனு ராகவபுடி கூறியுள்ளார்.