ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள்
ADDED : 10 minutes ago
தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருப்பவர் நடிகை ருக்மணி வசந்த். தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான காந்தாரா 2 அவரை இன்னும் பிரபலமாக்கியது. தற்போது யுஷ் உடன் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் தனக்கு பிடித்த 10 விஷயங்களை இன்ஸ்டாகிராமில் படத்துடன் பட்டியலிட்டுள்ளார்.
அதில், ‛‛புத்தகங்கள், வண்ணமயமான உணவுகள், பூக்கள், சூரியன் மறையும் நேரம், கடல், காற்றில் ஆடும் இலைகள், குதிரை சவாரி, வேலை, ஐஸ்கிரீம் மற்றும் இயற்கையோடு சேர்ந்த நடை பயணம்'' ஆகியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.