'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான்
ADDED : 118 days ago
கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நானும் கணேஷ் ராஜகோபாலனும் 38 வருட நண்பர்கள். அப்போது இருந்தே அவரது வயலின் இசையை நான் ரெக்கார்ட் செய்து வருகிறேன். நான் முதன்முதலில் கேட்ட வயலின் ஹார்மோனி, இளையராஜாவின் 'ஹவ் டு நேம் இட்'. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம். ஆனால், கையில் வாசிக்கும் அனுபவமே சிறந்தது. அதில் தான் மனித உணர்ச்சிகளை கடத்த முடியும். நாம் அனுபவித்த வயலின் அனுபவம் அனைவருக்கும் விரிவடைய வேண்டும். இந்த வயலின் சிம்பொனி பலருக்கும் உத்வேகம் தரும்” என்றார்.