உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிர்த்தி சனோன், ராஷ்மிகாவால் அப்செட்டில் இருக்கிறாரா ஷாகித் கபூர்? : நடிகை பதிவால் சலசலப்பு

கிர்த்தி சனோன், ராஷ்மிகாவால் அப்செட்டில் இருக்கிறாரா ஷாகித் கபூர்? : நடிகை பதிவால் சலசலப்பு

பாலிவுட்டில் கடந்த 2012ம் வருடம் வெளியாகி ஹிட்டான படம் காக்டெயில். சைப் அலிகான், தீபிகா படுகோனே நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காக்டெயில் 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஹோமி அடஜானியா தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் இருந்த நட்சத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி சனோன் ஆகியோர் நடிக்க, கதாநாயகனாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது கதாபாத்திரம் கொஞ்ச நேரமே இடம்பெறும் விதமாக இருப்பதாகவும் ஷாகித் கபூர் அப்செட்டில் இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியானது.

ரசிகர்கள் இதை சாதாரணமாக கடந்து போய் இருப்பார்கள். ஆனால் பிரபல நடிகை பிபாஷா பாசு இந்த செய்தியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரிப்போர்ட் செய்து உள்ளார். இவர் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதாலேயே அவரால் பகிரப்பட்ட இந்த செய்தி நெட்டிசன்களிடம் கவனம் பெற்று வைரலாக பரவியது. இது குறித்து படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் ஏதேனும் விளக்கம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !