'ரவுத்திரன்' ஆக மாறும் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ்!
ADDED : 8 minutes ago
தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சமீபத்தில் திரைக்கு வந்த 'அங்கீகாரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ராஜேஷிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த ஊக்கத்துடன் தற்போது அடுத்த படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் ராஜேஷ். ராஜேஷின் புதிய படத்தை பிரசாந்த் பாண்டியராஜனின் உதவி இயக்குநர் ரீகன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ரவுத்திரன்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் 25 வயது காலகட்டம், 30 வயதுக்கும் மேல் காலகட்டம் மற்றும் 50 வயது காலகட்டம் என மூன்று பருவத்திலும் ராஜேஷ் தனது உடலை மெருகேற்றி, இழைத்து நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.