உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லூசிபர் கதையில் சிரஞ்சீவிக்கு ஏற்ப மாறுதல்: மோகன் ராஜா

லூசிபர் கதையில் சிரஞ்சீவிக்கு ஏற்ப மாறுதல்: மோகன் ராஜா

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் லூசிபர். மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் நடித்திருந்தனர் நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன் ராஜா இயக்குகிறார்.

இது சிரஞ்சீவியின் 153வது படமாகும். கொனிடல்லா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கம் ஐதராபாத் பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது. இதில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், கோபி அசந்தா உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !