உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன்

மீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன்

பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி அசுரன் படத்தை இயக்கினார் வெற்றிமாறன். தனுஷ் நாயகனாக நடித்த அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு தனுசுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

அதையடுத்து தற்போது சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் விஜய் சேதுபதி கைதியாக நடிக்க கவுதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இயக்குகிறார் வெற்றிமாறன்.

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை தழுவி உருவாகிறது. ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்த கதைக்களத்தில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக நாவல் மற்றும் சிறுகதைகளை தழுவி படங்கள் இயக்கி வரும் வெற்றிமாறன், இதன்பிறகு படமாக்குவதற்கும் சில கதாசிரியர்களின் கதையை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !