விரதமிருந்து இருமுடி கட்டுங்கள்
ADDED :2322 days ago
சபரிமலை பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆசையில் சிலர் பம்பை நதிக்கரையிலேயே இருமுடி கட்டி மலை ஏறுகிறார்கள். இவர்களால், விரதமிருந்து வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விரதமிருந்து குருசாமி அல்லது கோயில் அர்ச்சகர் மூலம் மாலை அணிந்து தான், கன்னி சுவாமிகள் மலைக்கு செல்ல வேண்டும். பம்பைக்கு சென்ற பிறகு மாலையணிந்து மலை ஏறுவது பாவச்செயல்.