உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

 பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு மூலவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு முடிந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !