பகல்பத்து, ராப்பத்து விழா
ADDED :2289 days ago
நாலாயிரதிவ்ய பிரபந்தப் பாசுரங்களை ராகதாளத்தோடு அபிநயத்து ஆடிப் பாடுவது அரையர் சேவை. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் மட்டும் இச்சேவை நடக்கிறது. பகல்பத்து என்னும் பெயரில் பகலில் பத்து நாட்களும் ராப்பத்து விழா என்னும் பெயரில் இரவில் பத்து நாட்களுமாக நடக்கிறது. மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் தொடங்கும் பகல்பத்து தசமியன்று முடியும். வைகுண்ட ஏகாதசி தினம் முதல் பஞ்சமி வரை ராப்பத்து நடைபெறும். ஸ்ரீவில்லி புத்துாரில் மார்கழி தவிர ஆடி,தை மாதங்களிலும் நடைபெறுகிறது.