பூஜை செய்யும் முன் படிங்க!
ADDED :2111 days ago
* சுவாமியின் இடதுபுறம் பழங்கள், சாம்பிராணி காட்டும் தூபக் கரண்டியையும் வலதுபுறம் பலகாரங்களையும் வைக்க வேண்டும்.
* பருகிய தீர்த்தத்தின் மீதியை மிதிபடும் இடத்தில் ஊற்றக் கூடாது. செடிகளில் ஊற்றலாம்.
* பூஜை அறையை தினமும், விளக்கை வாரம் ஒருமுறையும் சுத்தம் செய்யுங்கள்.
* கடவுளின் திருநாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லியபடி தீபாராதனை காட்டுவது சிறப்பு.
* குடும்பத்தினர் பங்கேற்று பாடல்களை பாடுவது, ஸ்லோகம் சொல்வது நல்லது.