கண் கண்ட தெய்வம்
ADDED :2190 days ago
பறவை, விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிர்களும் இருட்டைக் கண்டு பயப்படுகின்றன. காலையில் சூரியன் உதயமானதும் எல்லா உயிர்களும் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், சோம்பல் முறித்து இரை தேடியும் புறப்படுகின்றன. இப்படி ஒளி தரும் சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும், வாழ்வின் ஆதாரமாகவும் விளங்குகிறார். மற்ற தெய்வங்களை விட, கண் கண்ட தெய்வமாகத் திழ்பவர் சூரியனே. இவரே சங்கு, சக்கரம் ஏந்திய கோலத்தில் சூரிய நாராயணராகத் திகழ்கிறார்.