உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி, சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தும்பைப்பட்டி, சங்கர நாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மதுரை: மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம், சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார வழிபாடு, நடைபெற்றது.   

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது,   பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது.  சுவாமி சந்தனக் காப்பு  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  பூஜைகள் உபயதாரர்கள் கோவையைச் சேர்ந்த டாக்டர் சித்ரா ராஜலெட்சுமி,  குமார்  குடும்பத்தினர்,   ரமேஷ் அய்யர்,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர். அனைவருக்கும் தயிர் சாதம்,  உளுந்து வடை பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !