உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திரவுபதி சமேத அர்ஜுனன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தேர், தீ மிதி விழா கடந்த 15ம் தேதி துவங்கியது விழாவின் ஐந்தாம் நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு வசந்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திரவுபதி சமேத அர்ஜுனன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. வரும் 22ம் தேதி கரகம், 23ம் தேதி மாலை தேர், தீமிதி விழா நடக்கிறது. இதில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !