உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றத்தில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிவனுக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5:30 முதல் இரவு 12:30 மணி வரை நான்கு கால பூஜைகள், அபிஷேகம் நடந்தன. மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவனுக்கு ஐந்து கால பூஜைகள் முடிந்து ஆனந்த அலங்காரத்தில் அருள்பாலித்தார். சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு இரண்டு கால பூஜை நடந்தது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழ ரத வீதியில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகம், பூஜைகள் நடந்தன. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளிய காசி விஸ்வநாதருக்கு ஐந்து கால பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !