மகாலிங்கேஸ்வரர் கோவிலில் மாசி பிரதோஷம்
ADDED :2057 days ago
குன்னூர்: குன்னூர் உபதலை ஊராட்சி, கேத் தொரை அருகே, கொதங்கட்டி கிராமத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில் நேற்று மாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. விழாவையொட்டி, நந்தி மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . இதில், நந்திக்கு பொதுமக்களே பாலாபிஷேகம் செய்து, செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பஜனை, அன்னதானம் இடம் பெற்றது. விழாவில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.